- தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது 2015 26-Aug-2015
இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது தமிழ்ப்புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரும் நவீனத்தமிழிலக்கிய இயக்கத்தின் மையங்களில் ஒன்றாகத் திகழ்பவருமான தேவதச்சனுக்கு வழங்கப்படுகிறது. தேவதச்சனை ஓர் ஆரம்பகட்ட இலக்கியவாசகனாக 1986ல் குற்றாலத்தில் சந்தித்தேன். அவருடன் கோயில்பட்டிக்குச் சென்று இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நவீனக் கவிதை என்பதை எனக்கு அறிமுகம் செய்தவர்களில் அவரும் ஒருவர். மின்னல்கோக்கும் மொழி என எம்.கோவிந்தனைப்பற்றி ஆற்றூர் ரவிவர்மா ஒரு கவிதையில் சொல்கிறார். தமிழில் அத்தகைய உரையாடல் கொண்டவர் தேவதச்சன். அவரது உரையாடல் நகைச்சுவையும் அன்றாடத்தன்மையும் கொண்டதாக தொடங்கி எளிதில்
- தேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது 27-Aug-2015
ஜெ, தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படவிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவரது கவிதைகளை அவ்வப்போது வாசித்தாலும் முழுமையாக வாசித்ததில்லை. அவரைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரமும் என் மனதில் இல்லை. வாசித்தவரை கவிதைகள் நினைவில் நிற்கவில்லை என்றே சொல்லவேண்டும். அவரது கவிதைகளைப்புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டியாக நீங்கள் எழுதும் நூல் அமையும் என்று நினைக்கிறேன். ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன் கவிதைக்கு பொழிப்புரை போடுவது வழக்கமில்லை. கவிதையைப்பற்றி எழுதுவது என்பது அதற்கு தான் அளித்த வாசிப்பைப் பற்றி எழுதுவதுதான். அது
- விஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து 28-Aug-2015
என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் எஸ். ராமகிருஷ்ணனின் பாராட்டு. அவரது இணையதளத்தில் தேவதச்சன் பற்றி இணையத்தில் கிடைக்கும் அனைத்துச்செய்திகளையும் தொகுத்திருக்கிறார்
- விஷ்ணுபுரம் நிகழ்ச்சிகள், கடிதம் 29-Aug-2015
எழுத்தாளர் நண்பருக்கு கலைச்செல்வி , திருச்சியிலிருந்து எழுதுகிறேன். ஏற்கனவே காடு, அனல்காற்று குறித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன். தங்களின் இணையதள வாசகி நான். என் வாழ்க்கையில் இத்தனை பெரிய பிரமிப்பு ஒரு மனிதரால் அடைந்தேன் என்றால் அது தங்களால்தான். வாசிப்பின் நீளமும் யோசிப்பின் அகலமும்.. நிச்சயமாகவே நீங்கள் எழுத்துலகிற்கு கிடைத்த ஒரு வரம். இதில் எவ்வித நீட்டல் குறுக்கல்கள் இல்லை. தங்களின் வழியாக தேடும் இலக்கியம்.. அரசியல்.. சமுதாயம்.. வரலாறு.. மிக பண்பட்டதாகத் தோன்றுகிறது எனக்கு. தொடர்ந்து
- விஷ்ணுபுரம் விருது தேவதச்சன் 29-Aug-2015
அன்புள்ள ஜெ தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி. அறியப்படாத கவிஞர்களை இவ்விருது என்னைப்போன்றவர்களுக்கு அறியப்படுத்துகிறது. நான் கவிதைகளை நிறைய வாசிப்பவன். எனக்குப்பிடித்தக் கவிஞர் சுகுமாரன். தேவதச்சன் கவிதைகளை வாசிக்கும்போது அவரை என் ரசனைக்கு உரியவராகச் சொல்லத்தோன்றவில்லை. அவற்றில் நான் கவிதைகளில் தேடும் உணர்ச்சிகரமான அம்சம் இல்லை. கவிதைகளுக்குரிய அழகான சொல்லாட்சிகளும் இல்லை. வேறு எந்த கவிதையம்சம் இருக்கிறது என்று சொல்லமுடியுமா என்று கேட்டேன். இப்படி அறிவிப்பு வந்தபிறகுஅவரது கவிதைகளை வாசித்தேன் அப்போதும் எனக்கு
- விஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்… 30-Aug-2015
ஜெ விஷ்ணுபுரம் விருது பெற்றிருக்கும் தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள். தேவதச்சன் கவிதைகளை நான் பல சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். அவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். திரும்பத்திரும்ப அவர்களும் புகைமூட்டமான தரிசனம் பேருணர்வு போன்ற சொற்களை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் காற்று ஆடாத மரத்தைக் கண்டதில்லை என்ற கவிதையை மூன்று படிமங்களாகப்பிரித்து எழுதியிருந்தது ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தது. அந்தக்கவிதைக்குள் நுழைய ஒரு நல்ல வாசல் சட்டென்று திறந்துகொண்டது. அதைப்போன்ற சிறந்த வாசிப்பனுபவமாக ஆகக்கூடிய விவாதங்கள்
- விஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை 31-Aug-2015
சங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிகிறது. தேவதச்சன் கவிதைகளைப்பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் இலக்கியவிருது தேவதச்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்
- தேவதச்சன், விஷ்ணுபுரம்விருது: கவிதையின் ஆங்கிலத்தமிழ் பற்றி 01-Sep-2015
அன்புள்ள ஜெ தேவதச்சன் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நான் தொடர்ந்து கவிதைகளை வாசித்துக்கொண்டிருப்பவன், அதிகமும் ஆங்கிலத்தில். தமிழில் நான் கவிதைகளைக் குறைவாகத்தான் வாசித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதையில் நான் காணும் சிறப்புகள் என்ன என்று சொல்கிறேன். அவை நவீன கூருணர்வு
- தேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது… 02-Sep-2015
ஜெ தேவதச்சனின் இந்தக்கவிதை என்னை ஒருவகை சோர்வுக்கும் பின்பு ஒரு நிம்மதிக்கும் தள்ளியது. இந்த நீலநிற பலூன் இந்த நீலநிற பலூன் மலரினும் மெலிதாக இருக்கிறது. எனினும் யாராவது பூமியை விட கனமானது எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன். நீங்களாவது கூறுங்களேன், இந்த நாற்பது வயதில் ஒரு பலூனை எப்படி கையில் வைத்திருப்பது என்று… பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன. எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை
- தேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1 15-Sep-2015
வணக்கம் ஜெயமோகன் , எப்படி இருக்கீங்க? அஜிதன் இப்ப என்ன பண்ணுகிறார் ? குடிப்பழக்கம் எந்த அளவிற்கு அடிமட்ட மக்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் தி இந்துவில் எழுதிய கட்டுரை மதுவின் கோரத்தை நெருக்கமாக உணர வைத்தது. சமகாலத்தில் என்னை மிகவும் பாதித்த கவிஞரான தேவதச்சன் அவர்களுக்கு உங்கள் அமைப்பிலிருந்து விஷ்ணுபுரம் விருது அறிவித்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். கவிதை நூல்களில் தேவதச்சனின் கவிதை நூல்கள் மட்டுமே வாங்கியிருக்கிறேன் ; படித்திருக்கிறேன். நான் வாசித்தவரையில் வேறு எவரும்
- தேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2 16-Sep-2015
அன்புள்ள ஜெ தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி மகிழ்ச்சி அளித்தது. நான் எண்பதுகளில் ஓரளவு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் கவிதைகளுக்கான மனநிலை இல்லாமல் போய்விட்டது. கவிதைக்கான மனநிலை ஏன் இல்லாது போகிறது என்பதை யோசித்தபோது எனக்கு முக்கியமாகத் தோன்றிய விஷயம் ஒன்றுதான். கவிதை நம்முடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றியதானாலும் அதன் சாராம்சம் நம் அன்றாட வாழ்க்கையில் இல்லை. அது ஆன்மிகமானது. தத்துவார்த்தகனமானது. ஆகவேநாம் நம்முடைய சொந்த முயற்சியினால் அதை வைத்துக்கொண்டிருக்கவேண்டும். பென்சிலைக் கூர் சீவுகிற மாதிரி நம்முடைய
- தேவதச்சன் கவிதை- ம.நவீன் 17-Sep-2015நவீன கவிதைகள் நம் வாழ்வோடு துணை வருகின்றன. நமக்கு ஓர் அனுபவம் நிகழும்போது சட்டென அவை தலைகாட்டுகின்றன. இதுவரை இல்லாத புதிய அர்த்தங்களைக் கூட கொடுக்கின்றன. இதுவரை தெரியாத புதிர்களுக்குச் சிலசமயம் பதிலாகியும் போகின்றன. சமகால வாழ்விலிருந்து முளைத்துவரும் தேவதச்சனின் கவிதைகள் உணர்ச்சிமிகு தருணங்கள் தோறும் உடன் வந்து ஒரு சொட்டு ரத்தம், ஒரு சொட்டு கண்ணீர், ஒரு சொட்டு எச்சில், ஒரு சொட்டு விந்தை விட்டுச்செல்வதாகவே தோன்றுகிறது. மலேசிய வானொலியில் நவீன கவிதைகள் குறித்த அறிமுகத்தில் ம.நவீன் ...
- விஷ்ணுபுரம் விருது விழா 2015 20-Nov-2015
தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது தேவதச்சனின் பதினைந்து கவிதைகள் தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது ===================================================================== தேவதச்சன்
- வாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம் 03-Dec-2015
தேவதச்சனின் கவிதைகள் அன்றாடத்திலிருந்து தன்னை வடித்து கொள்கின்றன. அவருக்கு கவிதை எழுதுவது கூட ‘ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போலிருக்கிறது’. சமையலறையில் பொங்கி வழியும் பால் கேலிப் புன்னகையுடன் ‘முன்னொரு காலத்தில்’ என கதைக்கத் துவங்குகிறது. ரேஷன் கடை வரிசையில் நிற்பது கூட அவருக்கு ஒரு யாத்திரை ஆகிறது. அசாதாரணமான சூழல்களை அவர் எதிர்கொள்வதில்லை. ஆனால் அன்றாடத்தில் ஒளிந்திருக்கும் வசீகரமான சிறு மர்மத்தை அவருடைய கவிதைகள் தொட்டெடுக்க முயல்கின்றன. சுநீல் கிருஷ்ணன்
- மண்குதிரை 05-Dec-2015
இயற்பெயர் ஜெய்குமார். பொறியியல் படித்தவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். 2000-ல் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். புதிய அறையின் சித்திரம் என்னும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிற்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். ‘வெம்பா’ உள்ளிட்ட மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன. முன்னோடிக் கவிஞர்களின் கவிதைகளை மதிப்பிட்டுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ============================================================ தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு
- கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’ 05-Dec-2015
எப்போவெல்லாம் மைனாவைப் பார்க்கிறேனோ அப்போவெல்லாம் தெரிகிறது நான் நீராலானவன் என்று அதன் குறுஞ்சிறகசைவில் என் மேலேயே தெறிக்கிறேன் நான் இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம்; அன்றாட கணத்தின் அசாதாரணம். அதன் சிறகசைவு நினைவில் இருக்கும் வேறோர் ஞாபகத்தை/அனுபவத்தை/வரலாற்றைத் தூண்டிவிடுகிறது. நமக்குள்ளிருக்கும் ஞாபகச் சுமைகொண்ட ஒரு நானும் அனுபவத்தின் நினைவைக்கொண்ட ஒரு நானும் சந்திக்கும் புள்ளிதான் இங்கே தெறிப்பாகத் தொழிற்படுகிறது. இது தேவதச்சன் என்னும் கவிஞன் உருவாக்கும் ஒரு பேருணர்வு; பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு
- ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1 07-Dec-2015
’இரண்டு சூரியன்’ தொகுப்பில் இத்தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை உள்ளது தன் நாவு நீட்டி மின்மினிப்பூச்சியை கவ்வுகிறது தவளை ஒன்று தவளையும் பூச்சியும் கலந்து புதிய ஜீவராசி ஒன்று ஒரு விநாடி தோன்றியது அதற்கு தேவதச்சம் என்று பெயர் வைத்தேன் தவளை ஒரு குழப்பமான ஜீவராசி,மனிதனைப் போலவே.தன் வீடு எதுவென்று அறியாது குழம்பித் தவிக்கும் ஒரு வகையினம்.அதுவே அதன் அலைபடலுக்குக் காரணமாக அமையப்பெற்றது.மாறாக,மின்மினி என்ற சொல்லே பரவசத்தில் படபடக்கும் இமையென ஒலிக்கிறது.முதலில், அது பறக்கத் தெரிந்த ஓர் உயிர்.மேலும்
- ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2 08-Dec-2015தேவதச்சனின் பாத்திரங்கள்: அதேபோல.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகள் சித்தரிப்புக்கவிதைகள் தான்.அவற்றில் எப்போதுமே திரைச்சீலை போல ஒரு பின்புலம் விரிக்கப்படுகிறது.காலம் இடம் சார்ந்த தகவல்கள் இல்லாத கவிதைகள் வெகுசிலவே.அதுவும் பின்னால் வந்த கவிதைகளில் தான் அவற்றைக் காணமுடிகிறது.கொஞ்சம் இசைத்தன்மை கலந்து குரல் மாற்றி, வேகம் கூட்டி, எழுதப்பட்டிருக்கும் கவிதைகள்.கடைசி டினோசாரில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஒரு நிதானமான அடங்கிய தொனியில் அமைந்த சித்தரிப்புத்தன்மை மிகுந்தவையே.இவற்றை ஒருங்கே வாசிப்பது மதியவேளை ஒன்றில் சமவெளியில் நடப்பதைப் போன்ற பிரமையை உண்டு செய்கிறது.சட்டென்று எழும்பிப் பறக்கக்கூடிய ...
- தேவதச்சனின் கலைக்கூடம்-வேணுகோபால் தயாநிதி- 09-Dec-2015சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்கு கவிதை என்பது, ’உயர்ந்து எழுந்து வரும் நம் சொந்த எண்ணங்கள்தானோ? என்று எண்ணும்படி, வாசிப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நினைவுகூறலாக இருக்க வேண்டும்’ என்கிறார் ஜான் கீட்ஸ், தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில். எழுத்தாளரின் வேலை என்பது “ஆமாம் நீங்கள் சொல்வது புரிகிறது” என்று வாசகனை சொல்ல வைப்பது. முற்றிலும் தெரியாத ஒன்றை சொல்வதல்ல, ஏற்கனவே தெரிந்த ஆனால் அவர்கள் சொல்லத்துணிந்திராத ஒன்றை சொல்வது” என்கிறார் ராபர்ட் ப்ராஸ்ட். இவ்விரு கவிஞர்களின் கூற்றுகளுக்கும் இயைந்தது போல அமைந்தவை ...
- ரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’ 11-Dec-2015
“At the edge of madness you howl diamonds and pearls.” ― Aberjhani, இலக்கிய வடிவங்களில் கவிதையே மிகவும் துருவித்தேடும் தன்மை கொண்டது .அது கிளைத்து பிரிந்து தேறும் பாதை இன்னதென்று யாருமே வகுத்துவிட முடியாது. மோப்ப நாயை மூச்சிறைக்க பின்தொடரும் பயிற்றுனர் போலே நாம் அதன் காலடித்தடங்களை பின்தொடர மட்டுமே முடியும் .அந்த நாய்க்கு எப்படி எதை தேடுவது தெரியும் ஆனாலும் கூட அது தேடும் பொருள் என்னவென்று அறியாது. தேவதச்சனின் கவிதைகளை
- ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1 12-Dec-20151. உலகிலிருந்து ஒரே ஒரு புகையிலைப்பொட்டலம் கால் சகன் எழுதிய காண்டாக்ட் என்னும் நாவலில் கதாநாயகி எல்லி அரோவே விண்ணிலிருந்து அனுப்பப்பட்ட செய்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எந்திரம் ஒன்றில் ஏறி, பிரபஞ்சத்தில் இருக்கும் காலத்துளை ஒன்றின் ஊடாக பிரபஞ்சத்தின் எல்லைகளுக்குப் பயணமாகிறாள். இந்த விண்வெளியை உருவாக்கி நிலை நிறுத்தி மறு ஆக்கம் செய்யும் முன்னோடிகளான பிரபஞ்ச சக்திகளுடன் உரையாட அவளுக்கு வாய்க்கிறது. அதன் பின் அவள் திரும்பி வருகிறாள். அவள் என்ன உணர்ந்தாள்?கால் சகன் அதை இப்படி சொல்கிறார். ’ஒரு ...
- ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2 13-Dec-20152. அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் 1986ம் வருடம் குற்றாலத்தில் கலாப்ரியா ஏற்பாடு செய்திருந்த கவியரங்கு ஒன்றுக்காக நான் காசர்கோடிலிருந்து வந்திருந்தேன். தமிழகத்தின் அத்தனை கவிஞர்களையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான ஒரு நிகழ்வாக அது இருந்தது. பூசல்கள், வம்புகள், கேலிகள், திடீர்நட்புகள், குழுபிரிதல்கள் என அன்று அது முக்கியமான ஒரு கொண்டாட்டம். இன்று வரை தொடரும் என் நெருக்கமான நட்புகள் பல அன்று அமைந்தவை. யுவன் சந்திரசேகரையும் தேவதச்சனையும் அன்றுதான் நான் சந்தித்தேன். கையில் வெற்றிலைப் பெட்டி ஒன்றை வைத்துக் கொண்டு, அடிக்கடி ...
- ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3 14-Dec-20153 . பிரபஞ்சம் விழித்தெழுந்த இரண்டாம் நாள் 1988 ல் நான் காலச்சுவடு இதழில் சில கவிதைகளை எழுதியிருந்தேன். எனது கவிதைகள் அனைத்தும் புனைவெழுத்துக்கான பயிற்சிகளே என்று இன்று உணர்கிறேன். ஒரு கணத்தில், அல்லது துளியில் நின்று முழுமை கொள்ளும் தரிசனமோ உணர்வுநிலையோ அல்ல என்னுடையது. அன்று நான் உருவகங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தேன் அது எனக்கு செவ்வியல் படைப்புகளில் இருந்த ஆர்வத்தின் விளைவு. கதேயையும் காளிதாசனையும் கம்பனையும் ஒரே விருப்போடு வாசித்துக் கொண்டிருந்த தீவிரமான நாட்கள் அவை. கோவில்பட்டிக்கு ...
- விஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு 15-Dec-2015
நண்பர்களுக்கு வரும் டிசம்பர் 27 அன்று விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா கோவையில் நிகழ்கிறது. டிசம்பர் 26 அன்றே சந்திப்புகளும் விவாதங்களும் நடக்கும் விழாவிற்கு முன்னரே வந்து தங்க விரும்பும் நண்பர்கள் http://goo.gl/forms/QxKQSXMgkJ இந்த பக்கத்தில் தகவல்களைப் பதிவுசெய்தால் ஏற்பாடுகள் செய்வது எளிதாக இருக்கும் விஜய்சூரியன் 1978march19@gmail.com 9965846999
- ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4 15-Dec-20154. குருவிகள் போய்விட்ட நிசப்தம் ஒரு சுவாரசியமான மாற்றத்தை நாம் பெண்களிடம் பார்க்கலாம். கன்னியர் என்று ஆகி மணமாகி அன்னையாவது வரை அவர்களின் உடல் சார்ந்த தன்னுணர்வு ஒருவகை இறுக்கத்தை அசைவுகளில் நிறுத்தியிருக்கும். சூழல் பற்றிய உணர்வு காற்றை ஏற்கும் தீபச்சுடர் போல அவர் அசைவுகளில் எப்போதும் இருக்கும். நேர்விழியை விட ஓரவிழி கூர்மை கொண்டிருக்கும். தொடுகையைப்போல் பார்வையை உணரும் தன்மையை உடல் அடைந்திருக்கும். ஆனால் முதற்குழந்தை அவர்களை விடுவிக்கிறது. ஒரு முலையில் குழந்தை பாலுண்ண மறுமுலையை திறந்து போட்டு ...
- ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5 16-Dec-20155. நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம் நாகர்கோயில் மதுரை நெடுஞ்சாலை எனக்கொரு தியான அனுபவத்தை அளிப்பதாக இருப்பது. நான் ஏழாவது வகுப்பு படிக்கும் போதுதான் முதல் முறையாக ஆரல்வாய்மொழிக் கணவாயை கடந்து தமிழக மையநிலத்திற்குள் வந்தேன். எங்களூரில் வானம் என்ற அனுபவத்தை பெறுவதற்கு ஏதாவது குன்றின்மேல் ஏறினால் தான் உண்டு. அதற்கேற்ற மரங்களற்ற மொட்டைப்பாறைக்குன்றுகளும் மிக அரிது. மரங்கள் மூடிய வானத் துண்டுகளைத்தான் சிறு வயதிலேயே பார்த்திருந்தோம். தொடுவானம் என்ற ஒன்று ஒரு போதும் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆரல்வாய்மொழியைக் கடந்ததுமே ...
- ‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6 17-Dec-20156. முட்டையிலிருந்து வெளிவருவது யார்? சமீபத்தில் ஓர் உரையாடலில் தேவதச்சன் சொன்னார். ’நான் ஒரு அத்வைதி’ .நான் புன்னகையுடன் ‘எந்தப்பொருளில்?” என்றேன். ’நிஸர்கதத்த மகராஜ் எந்தப்பொருளில் அத்வைதியோ அந்தப்பொருளில்’ என்றார். வெற்றிலை வாய்குவித்து சோடாப்புட்டி வழியாக கண்கள் தெறிக்கச் சிரித்து “அத்வைதம் பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்கிற அத்வைதம்”. அவர் அதையும் ஒருவகை விளையாட்டாகவே அவர் சொல்கிறார். நிஸர்கதத்தர் வீரசைவ மரபினர். அவருடையது சிவாத்வைதம். மேலைத்தத்துவத்தின் கலைச் சொல்லை பயன்படுத்தினால் absolutist என்று சொல்ல வேண்டும் நடராஜ குரு தன்னுடைய ...
- தேவதச்சன் கடிதங்கள் 18-Dec-2015ஜெ அத்துவான வெளியின் கவிதை .. முதல் இரு பகுதிகளைப் படித்தேன் , சந்தேகமில்லாமல் ஜெ வின் 2016ன் மிகச்சிறந்த கட்டுரைகள் இவை. கற்பனைவாதம் , செவ்வியல் மற்றும் அன்றாடம் , யாப்பு என்னும் வடிவம் அல்ல அதன் பேசுபொருள் தான் மரபு வாசகர்களைத் திகைக்க வைத்தது என்கிற வரி முற்றிலும் புதிய அவதானிப்பு என எண்ணுகிறேன். ஒளியாலானதிற்கும் மேல் இது. ‘வாய்முதல் வாதம்’ ஒரு கவித்துவ நையாண்டி. தேவதச்சனின் உரையாடல் கலை பற்றிய கணக்கீடு துல்லியம் /அற்புதம். ஆம் ...
- தேவதச்சன் ஆங்கிலத்தில் 21-Dec-2015தேவதச்சன் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கமும் மூலமும். பதாகை இணையப்பக்கத்தில் இருந்து. மொழியாக்கம் உருவாக்கும் சிக்கல்களும் விவாதிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதம் கவிதைகளைப்புரிந்துகொள்ள சிறந்த வாசலாக உள்ளது. http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-lasttime/ http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-goatherd/ http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-washingcloth/ http://padhaakai.com/2015/12/20/devatachan-nambi-jellyfish/
- அனைவரும் வருக! 22-Dec-2015
டிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும். துறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ் விருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் தேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன் தேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர் வாழ்த்துரை லட்சுமி மணிவண்ணன் வாழ்த்துரை ஜெயமோகன் ஏற்புரை தேவதச்சன்
- தேவதச்சன் பார்வைகள் 23-Dec-2015தேவதச்சன் சில கட்டுரைகள் தேவதச்சன் கவிதைகளின் நாயகன் சிறு கணங்களின் புத்தகம் கவிதையின் கால்தடங்கள் சுகுமாரன்
- தேவதச்சன் ஆவணப்படம் 24-Dec-2015தேவதச்சனைப்பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சரவணன் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_ojE_WJS6ic ஆவணப்படம் யூ டியூபில் பார்க்க
- தேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு 25-Dec-20151 சிறுமி கூவுகிறாள். நான் போகிற இடம் எல்லாம் நிலா கூடவே வருகிறதே. சிறுவன் கத்தினான். இல்லை. நில்லா என்கூட வருகிறது இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில் பிரிந்தனர். வீட்டிக்குள் நுழைந்து, உடன் வெளியே வந்து எட்டி பார்க்கிறாள். நிலா இருக்கிறதா? இருக்கிறதே அவள் சின்ன அலையை போல சுருண்டாள் அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி எல்லோர் கூடவும் போன நிலா பிறகு எங்கே போனதென்று எல்லோருக்கும் தெரியவில்லை 2 காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன வெட்ட வெளியில் ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான் தூரத்து மேகங்களை சாலை வாகனங்களை மற்றும் ...
- இன்று விஷ்ணுபுரம் விருது விழா 26-Dec-2015
இன்று முதல் விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது. இன்று காலைமுதல் ராஜஸ்தானி நிவாஸில் நண்பர்கள் கூடுகிறார்கள். சென்னை, பெங்களூர், திருச்சி பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். அனைவருக்கும் எளிய கூட்டான தங்குமிடமாக ராஜஸ்தானி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது- பெண்களுக்கு தனி அறைகள் உண்டு. சனி ஞாயிறு இருநாட்களும் உணவும் ஏற்பாடாகியிருக்கிறது. தேவதச்சன் 26 ஆம் தேதியே வருவார். பல எழுத்தாள நண்பர்களும் கலைஞர்களும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடனான முறைமைப்படுத்தப்படாத கலந்துரையாடல்கள் நிகழும். எழுத்தாளர்களுடன் நேரடி உரையாடல்களுக்கும்
- விருதுவிழா, முதல்நாள் 27-Dec-2015
சென்ற 20-12-2015 அன்று நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் பேலூர் ஹளபீடு வழியாக ஒரு பயணம் மேற்கொண்டோம். பெங்களூர் சென்று சோம்நாத்பூர், தொட்டஹடஹள்ளி, பேலூர்,ஹளபீடு என ஒரு ஐந்துநாள். 25 ஆம் தேதி அருண்மொழியும் சைதன்யாவும் ரயிலில் நாகர்கோயில் சென்றனர். அங்கே அருண்மொழியின் அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர். நானும் அஜிதனும் நள்ளிரவில் பஸ்ஸில் கிளம்பி கோவைசென்றோம் நான்குமணிநேரம் பெங்களூரில் பஸ்காத்து நிற்கவேண்டியிருந்தது. ஆகவே ஒரு சினிமாவுக்குச்சென்றோம். பாஜிராவ் மஸ்தானி என்னும் படம். அபத்தமான படம் .ஆபாசமான வரைகலைக்காட்சி.
- விழா கடிதங்கள் 28-Dec-2015
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு 26.12.2015 அன்று நடந்த விவாதங்களில் கலந்து கொண்டேன். காலையில் நடந்த விவாதத்தில் தேவதச்சன் அவர்களின் கவிதை பற்றிய விவாதமும் அது தொடர்பான கேள்விகளும் அவரின் பின்னலிட்ட பதில்களும் குறிப்பிட்ட படைப்பாளியை நோக்கி உந்துகிறது. இது ஒரு நல்ல முயற்சி. மதிய விவாதம் சிறுகதைக்கான அமர்வு போன்றிருந்தது. சுரேஷ் அவர்களின் எடுத்து கொடுக்க கே.என்.செந்தில் அவர்கள் கதைக் களத்தையும் தளத்தையும் விவரிக்க தாங்கள் விவாதப் பொருள் விலகாமல் ஒருங்கிணைத்து தங்களின் கேள்விகளின் மூலம்
- விழா படங்கள் 28-Dec-2015
விழா புகைப்படங்கள் https://www.facebook.com/vishnupuram.vattam/ Vishnupuram Award Function 2015 Photos
- விஷ்ணுபுரம்விழா -சுனில் கிருஷ்ணன் 29-Dec-2015
ஆசிரியர்களையும் நண்பர்களையும் ஒரு சேர சந்திக்க போகிறோம் எனும் உற்சாகம் விழா துவங்குவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே பரவி விட்டது. பயண திட்டங்கள் பற்றி திரும்ப திரும்ப நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். கிளம்பும் வெள்ளியன்று இரு துயர செய்திகள் என்னை நிலைகுலைய செய்தன. தேவதச்சனின் ஆவணப்படத்தை இயக்கிய சரவணனின் தந்தை மரணமடைந்தார். சரவணனை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் அவர் நண்பர்களுடன் சேர்ந்து கடினமாக உழைத்து கொண்டிருந்தார் என்பதை அறிவேன். மரண தருவாயில் உடனிருக்க
- விழா – மணிமாறன் 29-Dec-2015
ட் இரு குரல்கள் அனைவருக்குமென் வணக்கம் கடந்த ஓரிரு வாரங்களாக தேவதச்சனின் சொற்களால் விண்ணில் பறந்தலைந்து கொண்டிருந்த மனது, விருது விழாவின் முந்தைய நாள் மாலையில் டி’ க்ருஸுடனான கலந்துரையாடலில் வெளிப்பட்ட அவரது செறிவான பேச்சால், கடலாழத்தில் மூழ்கி அலையத் துவங்கியது. நேர்மையும், பாசாங்கற்ற ஆதங்கமும் கொண்ட ஆத்மார்த்தமான பேச்சது. நிலம் சார்ந்த புரிதலே சிறிதென்றிருக்கும் போது, இல்லாத நெய்தல் சார்ந்த புரிதலை என்னுள் விதைத்துச் சென்றது. மீனவர் பிரச்சினையை வெறும் செய்தியாகவும் இலங்கை கடற்படையின்
- விழா- கடிதங்கள் 2 30-Dec-2015
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். விஷ்ணுபுரம் விழா அளித்த இனிய நினைவுகளை மனதில் மீட்டிக் கொண்டே இருக்கிறேன். நன்றி. நான் உள்ளே நுழையும் போது நீங்கள் பலராமர் குறித்து பேசிக் கொண்டிருந்தீர்கள் அதன் பின் தேவதச்சன் அவர்கள் உள்ளே நுழைய மெல்ல அவருடைய கவிதை நோக்கி உரையாடலும் கவனமும் குவிய துவங்கியது. மாலை ஜோ டி குரூஸ் உடனான உரையாடல். இதை எப்படி வர்ணிப்பது என்றே புரியவில்லை. கிட்டத்தட்ட களிறு புகுந்தது போல உள்ளே நுழைந்தார். பொதுவாக உங்களின்
- விழா பதிவுகள் 3 30-Dec-2015
அன்பின் ஜெ எம்., மனம் நிரம்பித்தளும்பிக்கொண்டிருக்கிறது. இன்னும் எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை விருது சார்ந்த இலக்கியக்கூடல்களின்போதும்,முகாம் சந்திப்புக்களின்போதும் ஏற்படும் அதே மன நெகிழ்ச்சிதான்… பலப்பல ஊர்கள்…நாடுகள் எனப் பல்வேறுதிசைகளிலிருந்து வரும் நம் நண்பர்கள், பல நாட்கள், ஏன் பல ஆண்டு இடைவெளிக்குப்பின் பார்த்தாலும் கூட ஏதோ முதல் நாள் மாலைதான் சந்தித்துப்பிரிந்தது போல் இயல்பாக உரையாட ஆரம்பித்து விடும் ஆனந்தம்,,,,புதிதாக வந்தவர்கள் கூட உடனே ஒட்டிப்பழகத் தொடங்கி விடும் நேசம்…..இது நம் குடும்பம்..இது நம்
- விழா 2015 – விஷ்ணுபுரம் விருது 30-Dec-2015
இருபத்தேழாம் தேதி காலை ஐந்தரை மணிக்கே அனைவரும் எழத்தொடங்கிவிட்டனர். இரவு 12 மணி வரை தொடர்ச்சியாகப் பாடல். அதற்குமேலும் விழித்திருக்கவே விரும்பினர். நான் தான் கட்டாயப்படுத்தித் தூங்கச்செய்தேன். காலை எழுந்ததுமே கூட்டமாக ஒரு நடை சென்றோம். அருகிலிருந்த டீக்கடைவரை சென்று டீ குடித்து மீள்வது வரை இலக்கிய விவாதம்தான். கோவையின் டீக்கடைகளுக்கு எங்களை நன்றாகத்தெரியும் ஏழுமணிக்குள் நண்பர்கள் டீ குடித்து விழா மனநிலைக்கு வந்திருந்தனர். ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிச்சிரித்து கொண்டிருந்தவர்களைத் திரட்டித்தான் காலையுணவுக்குக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. ஒன்பதுமணிக்கு
- விழா 2015- கிருஷ்ணன் 31-Dec-2015
இது போன்ற கூடுகைகளின் முக்கிய பங்களிப்பே ஜெ தனது விழா உரையில் கூறியது போல “ஊசிகளைக் கூர் தீட்டிக் கொள்வது”. ஒவ்வொரு முறையும் புதிய நோக்குகள், தகவல்கள் மற்றும் உணர்வு நிலைகளுடன் திரும்புவேன். சில ஆண்டுகள் தோய்வடைந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா ஒரு அறிவார்வலனுக்கு நல் விருந்து. தேவதச்சன் ஒரு ஆளுமையாக ஒரு பாத்திரமாக இந்த இரு நாட்களிலும் பரந்து விரிந்தார். அவர் ஒரு இசை ரசிகன் போல உரையாடல்களில் தலையை ஆட்டி
- விழா 2015 கடிதங்கள் 4 31-Dec-2015
ஜெ நிறைவான தருணம் எல்லா நேரத்திலும் வந்துவிடுமா? வருடத்தின் கடைசியில் தன் கருத்தொத்த நண்பர்களின் ஒரு சந்திப்பில் அது நிகழுமென்றால் அது ஆனந்தத்தின் உச்சம் தான். ஒவ்வொரு ஆண்டும் நிகழும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவமும் அது தரும் சுகம் அலாதியானதுதான். அதற்கு நேரம் ஒதுக்கி தன் உறைந்துபோன செல்களை புதுப்பித்து கொள்ள முயலும் இலக்கிய ஆளுமைகளை நினைத்து பெருமை கொள்கிறேன். ஞானக்கூத்தன் விழாப் பற்றி இப்போதுதான் படித்தது மாதிரி இருந்தது அதற்குள் ஒராண்டு
- விழா 2015 கடிதங்கள் 5 31-Dec-2015
ஜெ மிகச்சிறப்பான விழா. மிகச்செறிவான உரையாடல்கள். நான் அனைத்திலும் கலந்துகொள்ளமுடியவில்லை. கலந்துகொண்ட அரங்குகள் எல்லாமே அபாரமாக இருந்தன. கே.என்.செந்தில் பேசிய அரங்கும் சரி யுவன் சந்திரசேகர் பேசிய அரங்கும் சரி ஆச்சரியப்படுமளவுக்குக் கூர்மையாக இருந்தன. பல விஷயங்களைக் கிரஹித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உள்வாங்கியவை இந்த வருடம் முழுக்க நினைத்துப்பார்க்கப் போதுமானவையாக இருந்தன ஒரு கவிஞர் அற்புதமாகப் பாடினார். அவர் பெயரை மறந்துவிட்டேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள் முத்துக்குமார் அன்புள்ள முத்துக்குமார் அவர் பெயர் ஜான்
- விஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்…. அழகியசிங்கர் 31-Dec-2015இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது தேவதச்சனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தேவதேவன், ஞானக்கூத்தன், தேவதச்சன் என்று மூன்று முக்கிய கவிஞர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதில் இன்னும் ஒருவரும் இருக்கிறார். எழுத்து காலத்திலிருந்து எழுதிவரும் வைதீஸ்வரன்தான் அவர். இது மாதிரி விருது வழங்குவதன் மூலம் படைப்பாளிகள் உற்சாகமடைவார்கள். பொதுவாக எந்த விருது வழங்கினாலும், அவருக்குக் கொடுத்தது சரியில்லை அல்லது சரி என்று விவாதம் நடக்கும். ஆனால் ...
- விழா, சந்திப்பு, மீட்பு 01-Jan-2016
திருஜெயமோகன்அவர்களுக்கு வணக்கம்… கிளம்புவதற்கு மனமில்லாமலே நான் புதுக்கோட்டைக்கு திரும்பினேன். விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ளவது இது மூன்றாவது வருடம். இம்முறைதான் நான் உங்களிடம் நெருங்கிவிட்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான் தான் தயங்கி நின்றேன். எல்லோரையும் அரவணைத்து போவதும்,ஒவ்வொரு புது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதும் கை பிடித்து பேசி பழகிவிடுவதும் ஒரு மிகப்பெரிய எழுத்தாளரின் பண்பு வியக்கச் செய்கிறது. இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷம் போல அலைந்து திரிந்து வேலை செய்வதை பார்க்கையில் உன்னதமான
- விழா 2015 கடிதங்கள் 6 01-Jan-2016
அன்புள்ள ஜெ சார் வெண்முரசை வாசித்ததுமே உங்களைச் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. பலமுறை தயங்கினேன். பிறகு சந்தித்தே தீர்வது என முடிவெடுத்தபடித்தான் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கே வந்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது . நான் முதல்நாளே வரமுடியவில்லை. அங்கே வேலைசெய்வதற்கு ஆளில்லை என்று தோன்றியது. உங்கள் நண்பர் ஆடிட்டர் சுரேஷ் பலரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. நான் சென்று உதவலாமா என நினைத்தேன். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாததனால் கூச்சமாக இருந்தது. நிகழ்வுகளெல்லாம் அருமை. நம்மூரில் எந்தக் கல்லூரியிலும் இதைப்போன்ற
- விழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு 02-Jan-2016
கும்பகோணத்தில் இருந்து கோவை செல்ல ஜனசதாப்தி ஆறுமணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறது. பகல் நேர சலிப்பூட்டும் பயணம். சலிப்பை விரட்டுவது அடுத்த இருபத்துநான்கு மணிநேரங்களுக்குள் நடக்கவிருந்த நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புகள்தான் கோபி ராமமூர்த்தி பதிவு
- இலக்கியமெனும் கனவு 02-Jan-2016
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒவ்வொரு தொடக்கமும் சிறந்த முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடனேயே தொடங்குகின்றன. அனைத்திற்கும் தான் எதிர்பார்க்கிற சிறந்த முடிவுகள் கிடைப்பதில்லை. என் 2015ம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்காத ஒரு சிறந்த முடிவாக விஷ்ணுபுரம் விருது விழா கிடைத்துள்ளது. அவ்வகையில் என் 2015 – என் மனநூலில் என்றென்றும் எடுத்து பார்த்து ரசிக்கப்போகும் – ஒரு அழகிய முழுமை கொண்ட வாக்கியமானது இந்த விழா என்னும் முற்றுப்புள்ளியில். சில மின்னஞ்சல் தொடர்புகள் மூலம் ஜெயமோகன்
- விழா 2015 கடிதங்கள் 7 03-Jan-2016
- விழா 2015 கடிதங்கள் -8 04-Jan-2016
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விழாவின் முந்தைய நாள் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன். சராசரி பெண்களுக்கு இல்லத்தை விட்டு ஒருநாள் பிரிந்து வர வேண்டுமெனில் எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்..? என்னுள் சுவையூறி கிடந்த இலக்கியம் நோக்கிய ஆர்வமே அதை வழிநடத்தியது. கிடைத்த அனுபவங்கள் அதனை சிறிதும் ஏமாற்றவில்லை. ஆனால் விழா நாளன்று நிகழ்ந்த நிகழ்வுகளாக பதியப்பட்ட தகவல்கள் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. எத்தனையெத்தனை விஷயங்களை தவற விட்டிருக்கிறோம் என்று தவிக்க வைத்தது. இது
- தேவதச்சன் –சபரிநாதன் உரை 03-May-2017மணி இதை அனுப்பி இருந்தார், இது ஒரு சிறந்த உரை. நவீன கவிதை உலகு மிக காத்திரமாகத் தான் இயங்குகிறது, உள்ளீடுள்ள கவிஞனின் குரல் இதில் ஒலிக்கிறது. இனிதான் நான் சபரி நாதனை படிக்கவேண்டும். கிருஷ்ணன் அன்புள்ள கிருஷ்ணன் ஆம், நல்ல உரைதான். கவிதையை பாவனைகள் ஏதுமில்லாமல் கவிதை வழியாகவே அணுகுகிறார். ஜெ ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1 ‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2