- புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை 13-Jan-2016

அன்புள்ள நண்பர்களுக்கு,
தொடர்ச்சியாக புதியவாசகர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கமான சந்திப்பு நிகழ்ச்சிகளில் தெரிந்த நண்பர்கள் சூழ இருப்பதனாலும் முன்கூட்டியே ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதனாலும் புதியவாசகர்கள் என்னை வந்து இயல்பாகச் சந்திப்பது கடினமாக இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆகவே முற்றிலும் புதியவாசகர்களுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடுசெய்தாலென்ன என்னும் எண்ணம் வந்தது. இதில் என் நண்பர்களான பழைய வாசகர்கள் கலந்துகொள்ளக்கூடாது. நிகழ்ச்சி அமைப்பாளர்களைத்தவிர. அவர்களும் சந்திப்புகளில் ஏதும் பேசக்கூடாது. அதிகபட்சம் ஓரிரு முறை வந்து முழுமையாக அறிமுகமாகாத வாசகர்களும் புதியவாசகர்களும் மட்டும் கலந்துகொள்ளலாம்.
ஜனவரி 30,31 ...
- ஊட்டி புதியவர்களின் சந்திப்பு 16-Feb-2016

ஊட்டி நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் நண்பர் விஜய்சூரியன், நிர்மால்யா, பரமேஷ்
சென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு. ஊட்டியில் இரண்டாவது புதியவர்களின் சந்திப்பு.
ஊட்டிகுருகுலத்திற்கு வருடம் ஒருமுறைமட்டும் இச்சந்திப்புக்காக வருவது என்று ஆகிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடம் நான்குமுறையாவது வந்துகொண்டிருந்தேன். குரு நித்யா இருந்தபோது மாதம் இருமுறை வந்து மூன்றுநாட்கள் வீதம் ஆறுநாட்கள் அங்கிருந்தேன். இந்த ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1 19-Feb-2016

அன்பிற்கினிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்களுடன் அ மலைச்சாமி எழுதுகிறேன்.
ஊட்டி சந்திப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. பதில்களை நான் தங்களிடம் கேட்டேன். ஆனால் தாங்களோ மேலும் சில கேள்விகளை என்னுள் விதைத்துவிட்டீர்கள். நான் கேட்டு நீங்கள் பதில் சொல்லா கேள்விகள் எவ்வளவு கேனத்தனமானவை என்பதை இப்போது உணர முடிகிறது. அந்த கேள்விகள் உங்களை இம்சித்தன என்பதை அக்கேள்விகளுக்கான தங்களின் மௌனங்களும், புன்னனகைகளும் எனக்கு உணர்த்தின. அக்கேள்விகளுக்காக தங்களிடம் இப்போது மன்னிப்பை கோருகிறேன்.
என் 32 வருட ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 2 20-Feb-2016

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
ஊட்டி சந்திப்பில் பங்கேற்க அனுமதி அளித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் .
தங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என் கணவர் பிரவீன் மூலமாக சில மாதங்கள் முன்பு கிடைத்தது .யானை டாக்டர் சிறுகதை மூலமே தங்கள் எழுத்து எனக்கு அறிமுகம் ஆயிற்று.
ஒரு காணொளியில் தாங்கள் கடல் திரைப்படத்தின் கதாபாத்திரங்களும் மொழியும் அன்னியமாக தெரிந்ததாக வந்த விமர்சனகளுக்கு காரணம் மீனவ சமூகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய இலக்கிய படைப்புகள் இல்லாததே காரணம் என்றும் ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 3 21-Feb-2016

அன்பின் ஜெ,
உடன் கலந்துகொண்ட நண்பர்களிடம் பகிர்ந்தது.
நண்பர்களே!!!!
சூடான பசுஞ்சாணத்தின் மணம். நான் ஊட்டி பேருந்து நிலையத்தில் இறங்கிய உடனே, என் நாசியை தழுவ, உடனே தர்க்க மணம் விழித்துக்கொண்டது. ஊட்டி குளிரில் பசுக்கள் உண்டா என, விழிகள் சுற்று முற்றும் தேடின.
ஏற்கெனவே காலதாமதமானதால், ஆட்டோவைத் தேடினேன். ஒரு ஆட்டோவினை அணுக, அவர் அடுத்ததை கைகாட்டினார். அவரிடம் ஃபெர்ன் ஹில் என ஆரம்பிக்க, ‘குருகுலமா’ என பதிலினார். ஆம் என சொல்லிகொண்டே உட்கார்ந்தேன். ஏறும்போதோ இறங்கும்போதோ எந்த பேரமும் இல்லை. ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4 22-Feb-2016
அன்புள்ள ஜெ,
ஊட்டி சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கொற்றவையை வாசித்திருந்தேன். கண்ணகி நெய்தலில் தன் பயணத்தைத் தொடங்கி நான்கு நிலங்களையும் கடந்து வளர்ந்து மதுரையை எரித்து உயர்ந்த குறிஞ்சி நிலத்தில் ஞானமடைகிறாள்.குறியீடுகள் படிமங்கள் தொன்மங்கள் எல்லாமே எனக்கு கொஞ்சம் குழப்பம் தான். இருந்தாலும் நண்பர்கள் அனைவரும் வெவ்வேறு நிலங்களை கடந்து அவரவர் மதுரையை எரித்து ஊட்டியை அடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் புதிய உலகத்தின் கதவுகள் திறக்கப் பட்டிருக்கிறது. முதல் அடியை உங்கள் கரம் ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 5 24-Feb-2016

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் நலமறிய விழைவு.
உதகையின் குளிர்சிலிர்ப்பில், மலையுச்சியில், ஒத்த இயல்புடைய நண்பர்கள் சூழ, இளமை ததும்பும் இலக்கிய ஆளுமை கொண்ட, உலகின் முக்கிய இலக்கிய ஆளுமையுடன் இரண்டு நாட்கள் உரையாடல், கேலிப்பேச்சுகள், விசாரிப்புகள் என்பது எவ்விதத்திலும் இந்திய இலக்கிய உலகில் கனவிலும் சாத்தியமற்றதே!
அதிலும், நான் எழுதிய சிறுகதைகளை நண்பர்கள் படித்து அவற்றைப் பற்றிய சிறிய விவாதம் தங்கள் முன்னிலையில் நடைபெற்றதை பெரும்பேறன்றி என்னவென கொள்வேன். உண்மையில் எனக்கு சிறுகதைகளை விட என் கவிதையினைப் பற்றியே எனக்கு ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6 25-Feb-2016

டியர் ஜெ,
போன கடிதத்தில் கேட்க நினைத்ததை விட்டு விட்டேன். வரலாறு குறித்து நீங்கள் பேசிய நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளவே சிரமப்பட்டேன். புனைவு வாசித்த அளவுக்கு இன்னும் வரலாறு வாசித்ததில்லை. வாசித்து மட்டுமே வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியாது என்று நீங்கள் சொன்னதையும் புரிந்து கொள்கிறேன். இருந்தாலும் இந்திய வரலாறு, தமிழக வரலாறு குறித்த வாசிப்பை யாரிலிருந்து தொடங்கலாம்? உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தமிழில் வெளிவந்த வரலாற்று நூல் பட்டியல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்கள்.
ரிஷி
அன்புள்ள ரிஷி
பொதுவாக இம்மாதிரி ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7 26-Feb-2016

அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலமா? வெகு நாள்களுக்குப் பிறகு தங்களுக்கு எழுதுகிறேன். நேற்று தங்களது காந்தி பற்றிய கட்டுரையைப் படித்து உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டே இருந்தேன். இப்படி சிரித்து வெகு நாள்கள் ஆகின்றன. நண்பனொருவனிடம் கொடுத்து வாசிக்க சொன்னேன். இப்படியெல்லாம் ஜெ எழுதுவாரா என்றான். எப்படியும் எழுத முடிவதால்தான் அவர் ஜெயமோகன் என்றேன். பல நண்பர்களுக்கு கட்டுரையின் இணைப்பை அனுப்பினேன் ஒரு சிறு குறிப்புடன். “சிரிக்காமல் படித்தால் ஆயிரம் பரிசு”
சென்னை புத்தக வெளியீட்டு விழா பதிவையும் வாசித்தேன். ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 8 28-Feb-2016

வணக்கம் ஜெமோ சார்,
உங்களுடனான ஊட்டி சந்திப்பு நிச்சயம் இந்த 30 வயதில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது என்பதிலும் , வரபோகும் நாட்களை எப்படி ஒரு தீர்க்கமான பார்வையுடனும் , தெளிவுடனும் வாழவேண்டிய மனிதனாக இருப்பதற்கும் பெருமுதவி புரியும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. வாழ்கையில் முதன்முதலாக எனக்கு மனம் என்ற ஓன்று இருப்பதை அறிந்த நாள்முதல் இந்த சந்திப்பு நாள் வரை நிச்சயம் சொல்லமுடியும் எனது மனம்,உடம்பு,கண்,காது என அனைத்து பாகமும் விழிப்பு நிலையில் தொடர்ந்து ...
- ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 9 08-Mar-2016

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் நலமறிய விழைவு.
உதகையின் குளிர்சிலிர்ப்பில், மலையுச்சியில், ஒத்த இயல்புடைய நண்பர்கள் சூழ, இளமை ததும்பும் இலக்கிய ஆளுமை கொண்ட, உலகின் முக்கிய இலக்கிய ஆளுமையுடன் இரண்டு நாட்கள் உரையாடல், கேலிப்பேச்சுகள், விசாரிப்புகள் என்பது எவ்விதத்திலும் இந்திய இலக்கிய உலகில் கனவிலும் சாத்தியமற்றதே!
அதிலும், நான் எழுதிய சிறுகதைகளை நண்பர்கள் படித்து அவற்றைப் பற்றிய சிறிய விவாதம் தங்கள் முன்னிலையில் நடைபெற்றதை பெரும்பேறன்றி என்னவென கொள்வேன். உண்மையில் எனக்கு சிறுகதைகளை விட என் கவிதையினைப் பற்றியே எனக்கு ...