Skip to content
May 22, 2022
  • Facebook
  • Youtube
  • Twitter
  • Instagram

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

Vishnupuram Ilakkiya Vattam

Primary Menu
  • முகப்பு
  • அறிமுகம்
  • விருதுகள்
    • விஷ்ணுபுரம் விருது
    • குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது
  • இலக்கிய கூடுகைகள்
    • குரு நித்யா முகாம்கள்
    • படைப்பாளுமை அரங்குகள்
    • கலந்துரையாடல்கள்
    • பிற அரங்குகள்-நிகழ்வுகள்
    • பயிற்சி பட்டறை
  • தொடர்புக்கு: solputhithu@gmail.com
நேரலை நிகழ்வு
  • 2015-05: ஊட்டி காவிய முகாம்

ஊட்டி காவிய முகாம் ,பதிவு

admin May 30, 2015

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ஒரு குடும்ப திருமண விழாவிற்க்கு 3 நாள் சென்று வந்த அனுபவம்.. மனதிற்கு பிடித்த, மனதிற்கு மிக அண்மையில் உள்ள ஒரு உலகத்தில் 3 நாள் கழித்த அனுபவத்தை தந்தது ஊட்டி முகாம்.. மிக சிறப்பாக அமைந்திருந்தது… விஜயராகவனுக்கும், மற்ற அனைத்து அமைப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள்..

ஜடாயு ஜெகெ எழுத்தின் பொது இயல்புகளை முன்வைத்து அளித்த பேச்சில் ஆரம்பித்து 3 நாட்கள் சென்றதே தெரியவில்லை…முதல் முறையாக ஜடாயு உரை கேட்கிறேன்.. மிக சிறப்பாகவும் உணர்ச்சி பூர்வகமாகவும் பேசினார்..

ஜேகே சிறுகதை வாசிப்பு அரஙகமும் ஒரு திறப்பாக அமைந்தது.. இரு கதைகளையும் வாசித்து இருந்தாலும், கதைகளை பற்றி சிந்தித்து சில எண்ணங்கள் இருந்தாலும் , அரங்கில் கேட்ட பல்தரப்பு வாசிப்பு சாத்தியங்கள் சிந்திக்க வைத்தன.. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ கதையில் .. “என் நிலையில் , என்னோடு இருந்தவரகள் எங்கெங்கோ செல்கையில் நான் மட்டும் இந்த அடுக்களையிலேயே இருக்கிறேனே ” என்ற வாசிப்பு (ராதாகிருஷ்ணன் என்று நினைக்கின்றேன்) ஒரு உதாரணம்..அதே மனநிலையில் தான் அடுத்து வந்த பிடித்த சிறுகதைகள் அமர்வும் கடந்தது .. முகாமுக்கு வருமுன் கதைகளை வாசித்து வந்திருக்கலாமே என்று ஏங்க வைத்த அமர்வு .. (வந்திருந்தாலும் கூட்டத்தில் பேச தைரியம் இருந்திருக்குமா என்பது வேறு விஷயம்..!)

கம்பராமாயணம் அரங்கில் ஜடாயுவின் உணர்ச்சிபூர்வமான பேச்சும் , அவர் அந்த கவிதைகளை வாசித்த விதமும், நாஞ்சில் நாடனின் கவிதைகளுக்கான உரையும் அற்புதம்.. நாடகத்தன்மையின், கவித்துவத்தின் சாரம்சத்தை உணர்ச்சியுடன் பேசும்போது கவிதை வாசிப்பில் அனுபவம் இல்லாத எனக்கு இந்த அமர்வுகள் கம்பராமாயணத்தை படிக்க தூண்டின..

கவிதை வாசிப்பில் பரிச்ச்சயமில்லாத எனக்கு இந்த 3 நாட்களில் , மிகவும் பிடித்த அமர்வுகள் கவிதை அமர்வுகளும், 3 ஆம் நாளின் படிமங்கள் பற்றிய அமர்வும் தான்!!… எல்லா அமர்வுகளிலும் நீங்கள் இடை இடையே விளக்கி கூறியதும், எல்லாவற்றையும் விட அமர்வுகளுக்கு வெளியே நடை பயிற்சியிலும், மற்ற நேரங்களிலும் தங்கள் உரையாடல்கள் கேட்பதே முகாமின் சிறப்பு அம்சமாக படுகிறது எனக்கு ..

முகாமிற்கு வந்த நண்பர்களிடம் ரொம்ப பேசவில்லை என்றாலும் நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி .. அமர்வுகளிலும் வெளியிலேயும் ஓடிக்கொண்டிருந்த கிண்டல்களையும், கேலிகளையும் மிகவும் ரசித்தேன்!!!

3 நாட்கள் காலை 9.30 , 10 இல் இருந்து இரவு 8.30 , 9 வரை நேரம் போனதே தெரியாமல் இப்படி பட்ட அமர்வுகளுக்கு போவது இது எனக்கு முதல் முறை !!.. முகாம் நடத்த குருகுலம் இடமும், அதை சுற்றி நடை பயிற்சி செல்ல கூடியதாக இருந்த மலை, காட்டு சுற்றுப்புரம்மும் முகாம் அனுபவத்தை இன்னும் கூட்டியது .. குருகுலத்தின் காயத்ரிஜி நித்ய சைத்தன்ய யதி பற்றியும் , அவரது வாழ்க்கை பற்றியும் பேசியதை கேட்டது ஒரு கூடுதல் அனுபவம் ..

அடுத்த முறை உங்களுடனான உரையாடல்களை (நடை பயிற்சி , மற்ற நேரங்களில் நடந்தது போல ) ஒரு தனி அமர்வாக வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் ..!!

அடுத்தது எப்போது இப்படிப்பட்ட கூட்டம் என்று எதிர்பார்க்க வைத்து விட்ட அனுபவம்!…

அன்புடன்

வெண்ணி

Continue Reading

Previous: இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..
Next: ஊட்டி காவிய முகாம் -மூன்றுநாட்கள்- ரகுராம்

வரவிருக்கும் நிகழ்வுகள்

இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்
  • 010 வரவிருக்கும் நிகழ்வுகள்

இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்

admin December 25, 2021
சந்திப்புகள் விழாக்கள் விழா ஒரு கோரிக்கை விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும் இன்று, 25-12-2021 அன்று விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை...
மேலும் படிக்க...
விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
  • 010 வரவிருக்கும் நிகழ்வுகள்

விஷ்ணுபுரம் விருது விழா, வருக!

admin December 7, 2021
விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது. முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத்,...
மேலும் படிக்க...
2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன்
  • 003 Event cover post
  • 010 வரவிருக்கும் நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • விஷ்ணுபுரம் விருது-விழா

2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன்

admin November 5, 2021
மேலும் படிக்க...

அண்மைய நிகழ்வுகள்

2021-10: புவியரசு 90 – விழா
  • 003 Event cover post
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • படைப்பாளுமை ஆய்வரங்கு-விழா

2021-10: புவியரசு 90 – விழா

admin October 24, 2021
மேலும் படிக்க...
2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா
  • 003 Event cover post
  • 008 வெண்முரசு தொடர்பானவை
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • பிற ஆய்வரங்கு/நிகழ்வு

2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா

admin October 9, 2021
மேலும் படிக்க...
2021-10: கவிதை அரங்கு (கோவை)
  • 003 Event cover post
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • பிற ஆய்வரங்கு/நிகழ்வு

2021-10: கவிதை அரங்கு (கோவை)

admin October 3, 2021
மேலும் படிக்க...
2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021
  • 003 Event cover post
  • 008 வெண்முரசு தொடர்பானவை
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • கலந்துரையாடல்

2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021

admin July 23, 2021
மேலும் படிக்க...
2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார்
  • 003 Event cover post
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது-விழா

2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார்

admin June 30, 2021
மேலும் படிக்க...
  • Facebook
  • Youtube
  • Twitter
  • Instagram
தொடர்புக்கு: solputhithu@gmail.com | Copyright விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் © All rights reserved. | MoreNews by AF themes.