விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள் அரங்கு இன்றைய இலக்கிய சூழலை பொதுவாக அறிந்துகொள்ளவும், இன்றைய படைப்பாளிகளுடன் உரையாடுவதற்கும் உதவியாக அமைக்கப்படுகின்றன. இவற்றில் பங்கேற்கும் படைப்பாளிகளை வாசகர்கள் வாசித்துவிட்டு வரவேண்டுமென்னும் நோக்குடன் அவர்கள் முன்னரே அறிமுகம் செய்யப்படுகிறார்கள்
இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் பங்கெடுப்பவர்களில் ஒருவர் இதழாசிரியரும் திரைவிமர்சகருமான கோகுல் பிரசாத். தமிழினி என்னும் இணையதளம் குறுகிய காலத்திலேயே தமிழில் குறிப்பிடத்தக்க இலக்கிய வெளியீடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. அதில் ஆசிரியர் பக்கங்களாக அவர் தொகுத்தளிப்பவை வாசகர் கவனத்திற்குரியவை. இலக்கியம், திரைப்படம் குறித்த கட்டுரைகளையும் எழுதிவருகிறார்